2016-21-ல் தமிழக அரசு பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை: சிஏஜி ரிப்போர்ட்

சென்னை:
தமிழகத்தில் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருந்தது. ரூ.2400 மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது என சிஏஜி அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
2016 – 2021 வரை தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14.76 சதவீதம் குறைந்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11.84 சதவீதம் குறைந்துள்ளது.
2,133 குடியிருப்புகளில் 5 கி.மீ சுற்றளவில் மேல் நிலைப் பள்ளிகளில் இல்லாமல் இருந்துள்ளது.
1,926 குடியிருப்புகளில் 8 கி.மீ சுற்றளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இல்லாமல் இருந்தது.
தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் இல்லை.
மாநில அளவில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது.
இதன் காரணமாக திறந்த வெளியிலும், மரங்களின் நிழலிலும் வகுப்பகள் நடத்தப்பட்டது.
தற்போது வகுப்பறைகள் கட்டப்படும் வேகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளி குறையாது.
கட்டிட உரிமங்கள், சுகாதார சான்றிதழ்கள், தீ பாதுகாப்பு சான்றதழ்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வந்தன.
ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக

2016-21-ல் தமிழக அரசு பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை: சிஏஜி ரிப்போர்ட்

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக