2016-21-ல் தமிழக அரசு பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை: சிஏஜி ரிப்போர்ட்

சென்னை:
தமிழகத்தில் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருந்தது. ரூ.2400 மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது என சிஏஜி அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
2016 – 2021 வரை தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14.76 சதவீதம் குறைந்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11.84 சதவீதம் குறைந்துள்ளது.
2,133 குடியிருப்புகளில் 5 கி.மீ சுற்றளவில் மேல் நிலைப் பள்ளிகளில் இல்லாமல் இருந்துள்ளது.
1,926 குடியிருப்புகளில் 8 கி.மீ சுற்றளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இல்லாமல் இருந்தது.
தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் இல்லை.
மாநில அளவில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது.
இதன் காரணமாக திறந்த வெளியிலும், மரங்களின் நிழலிலும் வகுப்பகள் நடத்தப்பட்டது.
தற்போது வகுப்பறைகள் கட்டப்படும் வேகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளி குறையாது.
கட்டிட உரிமங்கள், சுகாதார சான்றிதழ்கள், தீ பாதுகாப்பு சான்றதழ்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வந்தன.
ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

2016-21-ல் தமிழக அரசு பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை: சிஏஜி ரிப்போர்ட்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்