3 திருமணம் செய்த திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது

சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரமூர்த்தி என்கிற எஸ்.கே.எஸ்.மூர்த்தி (52). ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில் சிப்ஸ் விநியோகம் செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். பின்னர் அக்கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் தற்போது பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு இவர் நளினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டு தேவிகா (36) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல் மனைவியான நளினியை பிரிந்து, தேவிகாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கணவரின் இந்த செயலால் மனவுளைச்சலுக்கு ஆளான முதல் மனைவி நளினி, கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுந்தரமூர்த்திக்கு பாஜக மகளிர் அணியை சேர்ந்த ஜெனிபர் என்பவருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து, அவர் கடந்த ஜூலை மாதம் ஜெனிபரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த அவரது 2வது மனைவி தேவிகா கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கல்யாண சுந்தரமூர்த்தி என்ற எஸ்.கே.எஸ் மூர்த்தியை போலீசார் கைது செய்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு மகளிர் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி சுந்தரமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பாஜக மாவட்ட துணைத் தலைவர் மூன்றாவது திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

3 திருமணம் செய்த திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகி கைது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.