சென்னை ராயப்பேட்டை யில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதிஉதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த 314 தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 கோடியே 14 லட்சம் குடும்ப நல நிதி வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.கமலக்கண்ணன் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், கோகுல இந்திரா, வைகை செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்&மாணவர்கள் அதிரடி கைது
சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது






