4வது டெஸ்ட் டிரா-பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களை இந்திய வென்றது. 3வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் டிரா ஆனது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் ஆட்டம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அகமதாபாத் நகரில் நடந்து வருகிறது.
4வது டெஸ்ட் கிரிக்கெட் டிரா ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை குவித்தது. கவாஜா 180 ரன்களை விளாசினார்.
கிரீன் சதம் பதிவு செய்தார். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நிதானமாக விளையாடி 571 ரன்களை குவித்தது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்தியா 178.5 ஓவர்களில் இந்த ஸ்கோரை எட்டியது.
இந்தியா 91 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 4வது நாளிலேயே ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
விராட் கோலி, 186 ரன்களை விளாசினார். மொத்தம் 364 பந்துகளை எதிர்கொண்ட அவர், இந்த ஸ்கோரை பதிவு செய்தார். அவர் 15 பவுண்டரிகளை விளாசிய அதேநேரம், ஒரு சிக்ஸர் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2வது இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்களை குவித்தது. இதையடுத்து, தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து விளையாடி வந்தது.
இன்றே 4வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் இந்த ஆட்டம் பெரும்பாலும் டிரா ஆகவே வாய்ப்பிருப்பதாகத் தெரிந்தது. அவ்வாறே டிராவும் ஆனது. 78.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை ஆஸி., எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்டில் தோற்றாலும், டிரா ஆனாலும் இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.
அதேநேரம், எந்த ரிசல்ட் வந்தாலும் இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு இந்தியாவுக்கு சாதக-பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது. அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இதன்காரணமாக, இந்திய அணி புள்ளிகள் அடிப்படையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களை இந்திய வென்றது. 3வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

4வது டெஸ்ட் டிரா-பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.