தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை வட்டம் 04.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் சைதாப்பேட்டை (கலைஞர் வளைவு அருகில்) பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை அபயம் அபயம் என வழங்கும் பாசறையின் சார்பாகச் சமூகநீதி காவலர் மதிப்பிற்குரிய அபயம் ஆதி நந்தன் லெமூரியர் M.A., L.L.B., நிறுவனர் தலைவர் அவர்களின் தலைமையில் கீழ்க் காணும் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1) ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை அரசுப் பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளோடு இணைக்க கூடாது.
2) ஆதிதிராவிடர் பள்ளிகளை அரசுப் பள்ளிக் கல்வித்துறையோடு இனைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
3) சாதிய மனோபாவ உள் நோக்கத்தோடு கோரிக்கை வைத்திருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
4) சாதிய வன்மத்தோடு செயல்பட்டு வரும் ஆசிரியர் கூட்டமைப்பின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
5) அரசுத் துறையில் பதவி உயர்வில் SC/ST மக்களுக்கான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக நீண்ட நெடுங்காலமாகக் கிடப்பில் போடப்பட்டு இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலத்துறையில் உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.
6) தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு எடுத்து எங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
7) வேங்கை வயல் மேல் பாதி மதுரை மோகூர் மற்றும்முள்ள பகுதிகளில் நடைபெற்ற அனைத்து சாதிய வன்ம செயல்களுக்கும் துரிதமான நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திரளானோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பித்தனர் நிகழ்ச்சி அபயம் C.கார்த்திகேயன் அபயம் அருள்முருகன் அபயம் ஆட்டோ பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.







