காந்திநகர்:
பெண்களின் பொருளாதார பிரதிநிதித்துவத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஜி20 எம்பவர் உச்சிமாநாடு, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நாளை (1ம் தேதி) நடைபெற உள்ளது. “பெண்கள் தலைமையிலான வளர்ச்சி: நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்தல்” என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இதில் ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல உலகளாவிய வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படும் உச்சிமாநாட்டை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி தொடங்கி வைக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஆயுஷ் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய், ஜி20 எம்பவர் கூட்டணியின் தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
ஜி20 எம்பவர் தொழில்நுட்ப சமத்துவ டிஜிட்டல் உள்ளடக்க தளம், சிறந்த நடைமுறைகள் அடங்கிய தொகுப்பு, கே.பி.ஐ தகவல்பலகை மற்றும் ஜி20 எம்பவர் அறிக்கை 2023 ஐ ஏற்றுக்கொள்வது உட்பட எம்பவர் கூட்டணியின் கீழ் உள்ள முக்கிய அம்சங்கள் துவக்க அமர்வில் நிறைந்திருக்கும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





