புதுடெல்லி:
இந்தியாவில் பணியில் இருக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் குழந்தைப்பேறு விடுப்பு வழங்குவதைப் போல குழந்தை பராமரிப்பு விடுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஐஏஎஸ் ஆகிய ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவைகளை வழங்கும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் அகில இந்திய சேவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களைப் போல் சிங்கிள் பேரண்டாக உள்ள ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை வளர்ப்புக்கான விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவைகளை வழங்கும் பெண் ஊழியர்கள் மற்றும் விதவை அல்லது விவாகரத்து பெற்ற ஒற்றை ஆண் ஊழியர்களுக்கும் 730 நாட்கள் வரையிலும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படலாம் என மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறை மத்திய சேவை அதிகாரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






