தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், புன்னகை- பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டனர். உடன் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் இரா.சாந்திமலர், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விமலா, கல்வி முதன்மை அலுவலர் மார்ஸ் மற்றும் உயர் அலுவலரகள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






