சென்னை:
மூன்றாவது தேசிய ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாநிலங்கள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இறுதியில் ஆந்திர பிரதேசம் மாநில அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி வாகை சூடிய தமிழ்நாடு ரெட் டென்னிஸ்பால் கிரிக்கெட் அணியின் செயலாளர் சரத்பாபு, துணை செயலாளர் விக்னேஷ்வரன், தமிழ் நாடு பயிற்சியாளர், சிரன் சீவிராஜேஷ், கேப்டன் சூரியகாந்து, ஹரிகரன், அபிஷேக், தர்ஷன், ரோகேஸ்வரன், நினாட், கிஷ்ஸோர், வக்குள், சுதன், மாதவ் பிரமானந்தம், கேஷ்சவ், பிரகதீஸ்வரா, சைனி ஆலிவர், துருபாட்டி ஆகியோர் வெற்றி கோப்பையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களை வீரர்களின் பெற்றோர் சார்பாக தொழில் அதிபர் சைதை ஆர்.டி.மூர்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





