சென்னை மாநகரில் அமைந்துள்ள பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா. இன்று முதல் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. மாநகரில் பல பகுதிகளில்யிருந்து அன்னையின் பக்தர்கள் காலை முதல் மாலை வரை நடை பயணமாக வந்த வண்ணமாக இருந்தார்கள். மாலை அன்னையின் கொடி தேர் பவணியாக வந்தது. அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் கொடி எற்றிவைத்தார்கள். இதில் திரளான அருள் தந்தையர்கள் பொதுமக்களும் கலந்துக்கொண்டு அன்னையின் ஆசியை பெற்றார்கள். மரியே வாழ்க என விண்னை பிளக்கும் அளவுக்கு மக்களின் குரலாக ஒளித்தது. பரவசத்தோடு வானவேடிக்கையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் மக்களுடைய வசதிக்காக பேருந்து வசதிகள் செய்யபட்டுயிருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்கதர்கள் ஆலயத்திற்கு வந்து அன்னையின் ஆசியை பெற்றார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






