சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்ததாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. ஓன்றிய அரசு பாஜக அரசை மாற்ற மக்கள் முன்வர வேண்டும் என கமல்ஹாசன் கருதுகிறார்.
காங்கிரஸ் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கமல் கருதுகிறார். ராகுல் காந்தியுடன் இணக்கமாகவும் அவர் இருக்கிறார். தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பது பற்றி கமல்ஹாசன் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததில் நியாயமான கருத்துள்ளதை புரிந்து கொண்டுள்ளோம். இந்தியா கூட்டணியில் செப்டம்பருக்குள் தொகுதிப் பங்கீடு முடியுமா? என கூற முடியாது. கமல்ஹாசனின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் எனறார் செய்தி தொடர்பாளர் முரளி ஆப்பாஸ்.






