வெற்றிகரமாக நிலவுக்கு இலகுரக லேண்டரை அனுப்பியது ஜப்பான்

இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இந்தியாவை தொடர்ந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்காக மிகச்சிறிய லேண்டரை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் என்ற இலகுரக லேண்டரை ஜப்பான் வடிவமைத்து பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வந்தது. சோதனைகள் திருப்திகரமான முடிவுகள் வந்ததை அடுத்து லேண்டரை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. கடந்த வாரம் லேண்டர் ஏவப்படவிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மொத்தம் 3 முறை ஜப்பானின் விண்கலம் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து H-IIA ராக்கெட் மூலம் தனது சந்திர பயணத்தை தொடங்கியது ஸ்லிம் லேண்டர். இதையடுத்து நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஜப்பானின் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதலில் 3 முதல் 4 மாதங்களுக்கு சந்திரனை சுற்றி வரும் லேண்டர், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவில் தரையிறங்க முயற்சிக்கும் என்று ஜப்பான் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஜப்பானின் இலகுரக லேண்டர் ஈடுபட இருப்பதாகவும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 திட்டப்படி, விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது இந்நிலையில், பல்வேறு நாடுகள் நிலவின் மீதான ஆய்வை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளன.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கும் நிலையில், அந்த வரிசையில் இணைய ஜப்பான் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சந்திரனில் தரையிறங்க மேற்கொண்ட 2 முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள், விண்கலத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

வெற்றிகரமாக நிலவுக்கு இலகுரக லேண்டரை அனுப்பியது ஜப்பான்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.