சென்னையில் பல இடங்களில் கனமழை..!

சென்னை:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது.

அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி , மீனம்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, அசோக் நகர் , ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் கனமழை..!