சென்னை:
தேச தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே கோதாமேடு பகுதியில் இலவச மருத்துவ முகாம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தூய்மைப்பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இந்தவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் இலா. பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் மன்சூர் அலிகான், மாவட்ட பொதுச் செயலாளர் சைதை ஆர்.சரவணன், பகுதி தலைவர்கள் செஞ்சியார் முத்தமிழ் மன்ன கிண்டி சி.கே.கணேசன், கோகுல கிருஷ்ணன், 142 வட்ட தலைவர்கள் ராஜ்கமல், ராஜேஷ் உள்பல ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






