இந்திய சர்வதேசத் திரைப்பட விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவா முதலமைச்சரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்….

சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தை இன்று பனாஜியின் அல்டின்ஹோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். கோவாவில் நடைபெற உள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சருடன் விவாதித்ததாக அமைச்சர் எல். முருகன் கூறினார்.

“இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான நிரந்தர இடமாக கோவா அறிவிக்கப்பட்ட பின்னர், சர்வதேச திரைப்பட விழாவுக்கான புகழ் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பிரபலமான விழா என்பதால் இந்த ஆண்டும், அதிக கவனத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டு நடந்த பிரதிநிதிகளின் பதிவு எண்ணிக்கை இந்த விழாவின் பிரபலத்திற்கு ஒரு சான்றாகும். இந்த ஆண்டு சாதனை எண்ணிக்கையிலான பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் எல். முருகன்.

நாட்டில் உள்ள திரைப்படத் துறை, இந்த விழாவை சொந்தமாக்குவதை அரசு விரும்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். “இந்த விழாவை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாக கருதுவதை நாங்கள் விரும்பவில்லை. சர்வதேச திரைப்பட விழாவை இந்திய திரைப்படத் துறை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் உடனான சந்திப்பு குறித்து பேசிய எல்.முருகன், ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸை அரசு விருந்தினராகக் கருதுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினார். “மைக்கேல் டக்ளஸின் வருகை இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக இருக்கும். விழாவில் அவருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம் என்றும் அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், சர்வதேச திரைப்பட விழா குறித்து இருவரும் விவாதித்தோம். விழா தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்த முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தோம். விழாவுக்கான அனைத்து பணிகளும் உரிய காலத்தில் முடிக்கப்படும்” என்றார்.

பின்னர், விழாவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எல்.முருகன் கலந்து கொண்டார். பிலிம் பஜார் நடைபெறும் இடங்களான கோவா மேரியட் ரிசார்ட் மற்றும் ப்ரோமனேட் ஆகிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். விழாவின் முக்கிய இடங்களான கலா அகாடமி மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கம் மற்றும் இந்த ஆண்டு தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் சினி மேளாவை நடத்தும் கேம்பல் மைதானத்தையும் அவர் பார்வையிட்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

இந்திய சர்வதேசத் திரைப்பட விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவா முதலமைச்சரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்….

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.