சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ஹெராயின் பறிமுதல்…

மீனம்பாக்கம்:
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு தாய் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. முன்னதாக, இந்த விமானத்தில் பெருமளவு போதைபொருள் கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பின்னர் நள்ளிரவில் தாய்லாந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பிய சென்னையில் வசிக்கும் வடமாநில வாலிபர் ஜான்ஜுட் தவாஸ் (23) என்பவர்மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட அவரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்துக்கு மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அழைத்து சென்று, அவரது உடைமைகளை பரிசோதனை செய்தனர்.

இதில் அவர் வைத்திருந்த கைப்பைக்குள் ஒரு ரகசிய அறை இருப்பது தெரியந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் ரூ.25 கோடி மதிப்பிலான 3.6 கிலோ ஹெராயினை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜான்ஜுட் ஜவாசை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை தி.நகர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ஹெராயின் பறிமுதல்…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு