புதுடெல்லி
மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன.
தெலுங்கானாவில் வருகிற 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது..
இந்தநிலையில் தெலுங்கானா மாநில தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது…
இறுதி நாளான இன்று தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…
பிரதமர் மோடி கரிம் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றினார். கூசுராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். போங்கிர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பியங்கா பிசாரம் செய்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






