மத்திய அமைச்சரவையில் மாற்றம்… 4 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு

சென்னை:
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மிசோரமில் சோரம் மக்கள் இயக்கமும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. இதைத்தொடர்ந்து , மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். இதனையடுத்து, இவர்கள் மூவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, நரேந்திர சிங் தோமர் வகித்து வந்த வேளாண் துறை, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஜல்சக்தி துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலேஜேவிடம் உணவு பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, பழங்குடியினர் நலன், சுகாதார இணை அமைச்சர் பாரதி பவாரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

மத்திய அமைச்சரவையில் மாற்றம்… 4 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச