சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 100 கிலோமீட்டர் பரப்பளவில் 10 ஏரிகளை ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளாக உருவாக்குங்கள்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது;-
மழை வெள்ள பாதிப்பு 50 ஆண்டு திராவிட கட்சிகளின் தோல்வி என்று நான் கருதுகிறேன். இதற்கு காரணம், பெரும்பாலும் 200 – 300 ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்து ஏரிகள் காணாமல் போயின. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏரி ஆக்கிரமிப்பிற்கு அனுமதி வழங்குகியிருக்கிறார்கள். நீர்நிலைகளுக்குள் மண்ணை கொட்டி நிரப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தில் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அதிகாரி அனுமதி கொடுத்தாரே அந்த அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்த்தேக்கங்கள் உருவாக்குங்கள் அதற்கு பாமக என்றும் உறுதுணையாக இருக்கும். சென்னையைச் சுற்றி 100 கிலோமீட்டர் பரப்பளவில் 10 ஏரிகளை ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளாக உருவாக்குங்கள்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அது எங்கே அமைப்பது என்பது தான் கேள்வி. பரந்தூர் பகுதியில் அமைப்பது என்று 4800 ஏக்கர் என்று தான் கூறினார்கள். ஆனால் தற்போது 5700 ஏக்கர் என்று கூறுகிறார்கள். கூடுதலாக ஆயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்த போகிறோம் என்று கூறுகிறார்கள். எனவே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது. திருப்போரூர் பகுதியில் 5000 ஏக்கர் அரசு நிலம் தரிசு இருக்கின்றது. அங்கே விமான நிலையம் அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.






