தேவகோட்டை:-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அரசு ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் மங்கையன், வேல்முருகன் ஆகியோர் மாணவ,மாணவிகளை முழுவதும் பரிசோதனை செய்து மாணவ, மாணவியரிடம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய தான். இந்நோயை தடுக்க இளம் வயது முதலே சத்தான காய்கறிகள், கீரைகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பாசிப்பயிறு கூட்டு வைத்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. பிராய்லர் கோழி சாப்பிடுவதை இளம் வயது முதலே பெண் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இளம் மாணவர்களாகிய நீங்கள் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை உங்களை சுற்றி உள்ள அனைவரிடமும் சொல்லி இந்நோய் பரவமால் தடுக்க முயற்சி எடுங்கள் என பேசினார்கள். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






