தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பம் கொடி!

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை என்ற ஊரில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் பேரவை தலைவர்.நந்தகுமார் தலைமையில் சிலம்ப பெயர் பலகை திறப்பு விழாவும். சிலம்பக் கொடி ஏற்று விழாவும் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர், கஜேந்திரன், மாநில பொருளாளர், ஜே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்றார் .

அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி, ஆர். முருகக்கனி ஆசான் சிலம்ப கொடியை ஏற்றினார். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் ஜே.ஈசன் பெயர் பலகை திறந்து வைத்தார்.

விரைவில் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியும் அதற்கு அடுத்து தேசிய போட்டியில் மே மாதம் சர்வதேச போட்டியும் நடத்த உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாக மாநில தலைவர் ஈசன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சி.பா.ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூடம் துணை தலைவர். முகமது அப்துல் காதர் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்களின் சிலம்ப நிகழ்ச்சி தீப்பந்த நிகழ்ச்சி போன்றவை மெய்சிலிர்க்க வைத்தது பெற்றோர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பம் கொடி!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.