தேசிய தகவல் மையத்தில் வேலை… தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி:
தேசிய தகவல் மையத்தில் விஞ்ஞானி, அறிவியல் அலுவலர், பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட உயரிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

விஞ்ஞானி – 71
அறிவியல் அலுவலர் / பொறியாளர் – 196
தொழில்நுட்ப உதவியாளர் – 331
மொத்தக் காலிப்பணியிடங்கள்: 598

அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்குத் தொடர்புடைய படிப்பில் பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பணிகளுக்கான கல்வித்தகுதி பற்றிய விரிவான தகவல்களுக்குத் தேசிய தகவல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பதாரர் 2023 ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
calicut.nielit.in/nic23/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.800/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு calicut.nielit.in/nic23/documentformats/DetailedAdvertisement.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தேசிய தகவல் மையத்தில் வேலை… தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.