மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாக மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மீனாட்சி அம்மான் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இன்று மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதியில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்டு பல்லாக்கில் அழைத்து வரப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

மதுரை வடக்கு மாசி வீதி பத்தாவது நாள் திருவிழாவான பூப்பல்லாக்குத் திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மீனாக்ஷி அம்மன் கருப்பசாமி அழகர் வேடமிட்டு விழாவில் சிறப்பாக வலம் வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

மதுரை சித்திரை திருவிழா

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்