தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள்! எம்.பி துரை வைகோ கோரிக்கை…!

தீபாவளி பண்டிகை:

நாடு முழுவதும் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை திருச்சி கோவை மதுரை தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் கல்வி வேலைத் தொழில் நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு:

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கு கழகம் மற்றும் ரயில்வே சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளும், நூற்றுக்கணக்கான சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கால ரயில்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கிய நிலையில் முன் பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கியுள்ளது.

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்:

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதோடு, அலைபேசியிலும் தொடர்பு கொண்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ கோரிக்கை எடுத்துள்ளார்.

சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை:

அதுபோலவே புதுக்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி, மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியும், அலைபேசி வழியாகவும் கேட்டுக் கொண்டேன். பரிசீலனை செய்துவிட்டு திரும்ப அழைப்பதாக கூறினார்கள்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு ரயில்கள்! எம்.பி துரை வைகோ கோரிக்கை…!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு