அலைமோதும் தொண்டர்கள்.. முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு…

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகியின் காரில் சென்று மாநாடு திடலை பார்வையிட்டார். மேலும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மாநாட்டு திடலுக்கு அருகில் உள்ள வீட்டில்தான் விஜய் தற்போது தங்கியுள்ளார்.

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தொண்டர்கள் நேற்று இரவு முதலே சாரை சாரையாக மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெண்களும் மாநாட்டில் பங்கேற்பதற்காக திரண்டனர். மாநாட்டு திடலில் 50000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்ததால் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு குவிந்தனர்.

பிற்பகலுக்கு பிறகு மாநாடு நடைபெறும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி காலையிலேயே மாநாட்டு திடலுக்குள் நுழைந்த தொண்டர்கள் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து இடம் பிடித்தனர். வெயில் காரணமாக அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் தற்போது மயக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே மாநாட்டு நிர்வாகிகள் மருத்துவ முகாம்களை மாநாட்டு திடலில் அமைத்துள்ளனர்.

அந்த மருத்துவ குழுவினர் மயக்கம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மயக்கம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.மேலும் தொண்டர்களுக்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர. இதனால் விக்கிரவாண்டி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது தொண்டர்கள் தொடர்ந்து வருகை புரிவதால் ஆம்புலன்ஸ்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொண்டர்களின் வருகை அதிகரித்து வருவதாலும் தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே அமர்ந்திருப்பதால் முன்கூட்டியே தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாட்டை தொடங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனை தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும், 5 மணிக்கு கட்சியின் தலைவர் விஜய், மாநாட்டு மேடைக்கு வருகை புரிவார், அங்கு அமைக்கப்பட்ட பிரத்தியேக நடைமேடையில் ராம்ப் வாக் செய்து தொண்டர்களை நோக்கி கையசைப்பார் கொடியேற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து நிகழ்வுகளும் முன்கூட்டியே நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கே மாநாடு தொடங்கும் என தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

அலைமோதும் தொண்டர்கள்.. முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்