ஓசூர் வனத்துறை- ஒரே நேரத்தில் புறப்பட்ட 85 யானைகள்…!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பன்னர்கட்டா தேசிய வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. சுமார் 260 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு யானைகள், சிறுத்தைகள், நரி, மான், ஓநாய், முதலை, மயில், பாம்புகள், புலிகள் என ஏராளமான விலங்குகள் இருக்கின்றன. இவற்றில் யானை கூட்டங்கள் அடிக்கடி வெளியேறி விடுகின்றன. குறிப்பாக தமிழக எல்லை பகுதியான ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சப்படுகின்றனர். விவசாய நிலங்கள், விளைபொருட்கள் மற்றும் இதர பொருட்களை நாசம் செய்து விடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே யானைகள் கூட்டம் வரும் போது வனத்துறை எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை வந்துள்ளது.

பெங்களூரு பன்னர்கட்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 85 யானைகள் இடம்பெயர்ந்த வண்ணம் இருக்கிறது. இவை பல்வேறு குழுக்களாக பிரிந்து ஓசூர் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இவற்றை தள்ளி, ஜவல்கிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளுக்குள் முகாமிட்டுள்ளன. குறிப்பாக நோகனூர் வனப்பகுதிக்குள் 20க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்துள்ளன.

இவை படிப்படியாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றன. இரவு நேரங்களில் மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு செல்கின்றன. எனவே ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம்.

இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கோ அல்லது வேறு எந்தவித பணிகளுக்கோ வெளியே வராதீர்கள். யானைகளை கண்டால் உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதேசமயம் யானைகளை தொந்தரவு செய்யாமல் இருப்பது முக்கியம். ஆபத்து ஏற்படாமல் இருக்க சற்று விலகியே இருக்க வேண்டும் என்று வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் அலர்ட்

இதையொட்டி ஓசூர் கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். யானை கூட்டங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

ஓசூர் வனத்துறை- ஒரே நேரத்தில் புறப்பட்ட 85 யானைகள்…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்