அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

விசிக மாவட்ட நிர்வாகத்தில் மறுசீரமைப்பு… திருமாவளவன் கொண்டு வரும் மாற்றம்!

தமிழக அரசியலில் முக்கிய அரசியல் கட்சியாக திகழ்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. தேர்தல் அரசியலில் கூட்டணி வியூகத்தை தொடர்ந்து கையிலெடுத்து வரும் திருமாவளவன், தங்கள் கட்சியை அமைப்பு ரீதியில் வலுவாக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

விசிக மாவட்ட செயலாளர்கள்

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எனவே ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற கணக்கில் காய் நகர்த்துகின்றனர். அப்படி பார்த்தால் இன்னும் 90 பேரை நியமிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் உயர்மட்ட குழு தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கட்சி தொண்டர்கள் மத்தியில் நேரலையில் பேசினார்.

அதில், மாவட்ட நிர்வாகத்தை சீரமைப்பது பற்றி ஏற்கனவே உங்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். அதுதொடர்பாக மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த நேரலை. 234 தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்களில் எஞ்சிய 90 பேரை புதிதாக ஆட்களை நியமிக்க இருக்கிறோம்.

திருமாவளவன் திட்டம்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன்படி, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், 4 மாவட்ட துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அதில் நிலப்பரப்பின் அடிப்படையில் 2 மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒரு பெண் மாவட்ட துணைச் செயலாளர், தலித் அல்லாத ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்படுவர். ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுதி மாவட்டத்திற்கு ஒருவர் நியமனம் செய்யப்படுவார். இவை இல்லாமல் 2 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறோம். ஏற்கனவே நியமிக்கப்பட்ட 144 மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து செயல்படுவர் என்று திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

விசிக மாவட்ட நிர்வாகத்தில் மறுசீரமைப்பு… திருமாவளவன் கொண்டு வரும் மாற்றம்!

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ