அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி/எஃப் -15 ராக்கெட் மூலம் என்விஎஸ் – 02 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மூலம்  ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100 ராக்கெட்டுகள் செலுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலுள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 06:23 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ் -02 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.இதன்மூலம் நேவிகேஷன் வரிசையில் 5 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்ட பின் இந்த திட்டம் முழுமையடையும் என்று இஸ்ரோவின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி டாக்டர் வி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் வெற்றிகரமான 100 ராக்கெட்டுகள் எனும் சாதனை நம் நாட்டிற்கே பெருமை என்று அவர் தெரிவித்தார். இந்த சாதனைக்காக அரும்பாடுபட்ட முன்னாள் இந்நாள் விஞ்ஞானிகள், உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுவரை, 500-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இதில் 400-க்கும் அதிகமான வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும் என்றார்.இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து விளக்கிய அவர், அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய ஶ்ரீஹரிகோட்டாவின் மூன்றாவது ஏவுதளம் இன்னும் நான்கு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டு ஆராய்ச்சியில் தயாராகி வரும்  செயற்கைக்கோள் நிசார் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.அடுத்த தலைமுறை ராக்கெட் கட்டுமானம், ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5 திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி மையம் அமைத்தல் ஆகியவை அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.

இந்திய விண்வெளித் துறை தற்சார்பை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்த டாக்டர் வி நாராயணன், வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை எட்ட இஸ்ரோ சிறப்பாக பங்காற்றும் என்றார். இந்த ஆண்டு மேலும் பல செயற்கைக்கோள் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை