தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

நவம்பர் 16 (இன்று) ஆண்டுத்தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்

உறுதியேற்போம்:
பத்திரிகையாளர் பாதுகாப்பு..

பத்திரிகையாளர் நலன்கள்..

பத்திரிகையாளர் உரிமைகள்..

சிறுகுறு மற்றும் வளர்ந்து வரும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றிட..

தாலுகா நிருபர்கள் அங்கீகாரம் பெற்றிட..

பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த..
பத்திரிகையாளர்களுக்கான அனைத்து சலுகைகளும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் கிடைத்திட..

பத்திரிகைத் துறையில் நிலவும் எதேச்சாதிகார போக்கை மாற்றிட..

சிறிய பத்திரிகை பெரிய பத்திரிகை என்ற பாகுபாடு நீங்கிட சமத்துவம் மலர்ந்திட..

ஏகபோக (Monopoly) முறையை தகர்த்திட..

சங்கங்கள் இணைந்து சங்கமம் ஆகிட..

உரிமைகளை பெற ஒற்றுமை உணர்வுடன் கரம் கோர்ப்போம்..

நமது ஒற்றுமையை உணர்த்தினால் மட்டுமே நமக்கான உரிய அங்கீகாரத்தை வென்றெடுக்க முடியும்

பத்திரிகையாளர் நலனை காத்திட, பத்திரிகைத் துறையை மேம்படுத்த நாம் அனைவரும் கைகோர்த்து நமது உரிமைகள் பெற இந்நாளில் உறுதியேற்போம்.!

தோழமையுடன்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
தலைமையகம்
9840035480

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்கள்