விழையாமை (பிறன் மனைவியை விரும்பாமை)
குறள். 145(15-5) “எளிதென இல்லிறப்பான் எய்துமெய் ஞான்றும்
விழியாது நிற்கும் பழி” அதாவது, எளிது என எண்ணி பிறன் மனைவியிடம் நெறியிழந்து நடப்பவன் எப்போதும் அழியாது நிற்கும், பழியை அடைவான் எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் நீதிமொழிகள் 6:25ல் “உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.” என்றும், நீதிமொழிகள் 5:8ல் ” உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.” என்றும், நீதிமொழிகள் 6:15ல் “ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.” என்றும் திருக்குறளும்
திருமறையும் பிறனில் விழாமை எனும் பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி எம்.ஏ., எம். பில். திருக்குறள் உண்மை உரை பேரவை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





