விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள் உயிரை காக்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை: டீன் தகவல்

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை தன்மை குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவமனையின் டீன் மரு. நாராயணசாமி தலைமை தாங்கினார். ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது டீன். நாராயணசாமி விபத்து காயம் குறித்து விளக்கி பேசுகையில், சாலை விபத்துக்களில் சிக்கி காயமடைபவர்களில் 10 சதவீதம் பேருக்கு முதுகு தண்டுவட எலும்பு மற்றும் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு கை கால் அசைக்க முடியாமல் சுவாசத்திற்கு உதவும் சதை செயல் இழக்கவோ நேரிடுகிறது.
இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 24 மணிநேரமும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிரமாக செயலாற்றி வருகிறது.
விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நோக்கில் உயர்தர மருத்துவ குழு தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக இலவச தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் நோயாளியின் கழுத்தின் 7வது எலும்பு முறிவு சிறப்பு திறன்மிக்க அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் மருத்துவ கண்காணிப்பு சோதனைகள் செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கபடுகிறது. இதன் காரணமாக 2-3 மாதங்களில் நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள் உயிரை காக்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை: டீன் தகவல்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்