சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
குறள் விளக்கம்: பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் கடவுளுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகிய அன்றாடப் பூசையும் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. அதாவது பரிசுத்த ஆவியின் பொழிவைப் பெறாத நிலையில் கடவுள் வழிபாடு அனைத்தும் நின்று போகும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாத்திராகமம் 34:20
வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது “எனவும் யாத்திராகமம் 34:26 உங்கள் நிலத்தில் முதன் முதல் விளைந்த முதற் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டு வாருங்கள்” எனவும், ஆதியாகமம் 4:3காயின் தன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான்” என்றும் லூக்கா 22:19 “பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” எனவும், திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.







