குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
விளக்கம்:
விருந்து என்பது உறவினர்களை மட்டுமல்ல, புதியவர்களையும் முகம் சுளிக்காமல், அகமகிழ்ந்து வரவேற்பது. அப்படிச் செய்பவர்களின் வீட்டில் செல்வம் பெருகும் என்பது இக்குறளின் கருத்து.முகம் மலர்ச்சியோடு (மகிழ்ச்சியோடு) நல்ல விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பவரின் வீட்டில், திருமகள் (செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி) மனம் மகிழ்ந்து தங்குவாள்
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்





