புதுச்சேரி ஜிப்மரில் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (14.04.2026) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பல்வேறு சங்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் சமூகப் புரட்சியாளருமான டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
ஜிப்மர் இயக்குநர் டாக்டர். வீர் சிங் நெகி, தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, இயக்குநர், ஜிப்மரின் அதிகாரபூர்வ செய்திமடலை வெளியிட்டார். இந்த செய்திமடல், ஜிப்மரின் முக்கிய சாதனைகள், முன்முயற்சிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதுடன், கல்வி, மருத்துவ சேவை, ஆராய்ச்சித் துறைகள் ஆகியவற்றில் நடைபெறும் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.
இந்நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் டாக்டர் வ
வீர் சிங் நேகி, டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் சமுதாயத்தில் எப்போதும் மிகுந்த பொருத்தமுடையவை எனக் குறிப்பிட்டார். சமூக நீதி, சமத்துவம், மனித கண்ணியத்தை முன்னிறுத்திய அவரது பார்வை, வழிகாட்டியாக உள்ளது என அவர் தெரிவித்தார். கல்வி சமூக மாற்றத்திற்கு வலுவான கருவி என அம்பேத்கர் வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த அவர், மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியில் சிறப்பை நிலைநிறுத்துவதில் ஜிப்மர் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தரமான சுகாதார சேவைகள் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களைச் சென்றடைய வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். டாக்டர் அம்பேத்கரின் உயரிய சிந்தனைகளுக்கிணங்க சமத்துவம், சேவை, ஆகியவற்றை முன்னிறுத்தும் உறுதிப்பாட்டுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.






