மேற்கு ஆசியாவில் பதற்ற நிலைமையை அடுத்து, இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து இன்று புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள், எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் தடையற்ற இருப்பை உறுதி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளை எடுத்துரைத்து, தற்போதைய எரிபொருள் விநியோக நிலவரம் குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஊடகங்களுக்குத் தெரிவித்தது.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், மக்கள் பீதியுடன் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







