நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிவாரண மதிப்பீடுகளை 21 மாநில அரசுகள் மற்றும் தேசிய தலைநகர் தில்லி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.ஆந்திரப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.வெப்ப அலைகளின் தீவிரம், காலஅளவு, அடிக்கடி உயர்ந்து வரும் அதன் தாக்கம், விளிம்பு நிலை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினர், திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்குமிட வசதியில்லாத வீடற்ற மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






