பழனியில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், அருள்ஜோதி வீதி பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் ஆட்டோ டிரைவர் சங்கர்(எ) சந்திரசேகர்(32) என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி DSP. தனஞ்செயன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்






