மெட்ரோ ரயில் பயன்பாடுகளுக்கான இயக்க அமைப்புமுறைகள் ( ஐஎல்எம்) துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்வதற்காக, கொல்கத்தா மெட்ரோ ரயில்வே, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் (ஐஐடி மெட்ராஸ்) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்தியச் சூழல்களில் எல்ஐஎம் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறு, செயல்பாட்டுத் திறன் மற்றும் மொத்த செலவு தாக்கங்களை ஆராய்வதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். கள அளவிலான சரிபார்ப்பு மற்றும் செயல்பாட்டுத் தரவுகளை உருவாக்குவதற்கு வசதியாக, ஒரு மெட்ரோ ரயில் சோதனைத் திட்டத்தை இந்த ஒருங்கிணைப்பு முன்மொழிகிறது. மேலும், குறுகிய வளைவுகள் மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட பாதைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வழித்தடச் சூழல்களுக்கு எல்ஐஎம் அமைப்புமுறைகளின் ஏற்புடைத்தன்மை குறித்தும் இந்த ஆய்வு மதிப்பிடும்.மேம்பட்ட நகர்ப்புற ரயில் தொழில்நுட்பங்களில் உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதற்கும், மெட்ரோ ரயில் துறையில் புத்தாக்கத்தால் உந்தப்படும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் இந்த முன்முயற்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் விளைவுகள், நாடு முழுவதும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களில் மாற்று இயக்க அமைப்புமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் இந்த சோதனைகள் முக்கிய பங்கு வகிக்கும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
இல்லறவியல் – 20 அதிகாரம் திருக்குறள் அதிகாரம்-5 இல்வாழ்க்கை மனைவியோடு கூடிவாழும் இல்லறச்





