மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. காப்பீட்டாளர்கள், பயனாளிகள் தாங்கள் பெற்ற மருத்துவச் சேவை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.பயனாளிகள் தங்களுக்கு அனுப்பப்படும் தானியங்கி குறுஞ்செய்தி இணைப்புகள், மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் குறியீடுகள் அல்லது இஎஸ்ஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களின் கருத்துகளை எளிதாகப் பதிவு செய்யலாம். ஸ்மார்ட்போன் மூலம் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்களது காப்பீட்டு எண்ணை உள்ளிட்டு, சில நொடிகளிலேயே தங்களது கருத்துகளைத் தெரிவிக்க முடியும். இது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதி செய்கிறது.தலைமையகம், மண்டல அலுவலகங்கள், உள்ளூர் சுகாதார மையங்கள் என மூன்று நிர்வாக நிலைகளில் டிஜிட்டல் தகவல் பலகைகள் மூலமாக இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சேவையின் தர மதிப்பீடு 3-க்கும் கீழ் குறையும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்கான இஎஸ்ஐசி-யின் உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 59 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்:




