ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயங்கிச் கொண்டிருந்த ஏசி (AC) ரயில் பெட்டிக்குள் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி, பயணி ஒருவர் எந்தவிதப் பயமும் இன்றி அகல்விளக்கு ஏற்றி, ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்து பூஜை செய்துள்ளார். தீப்பிடிக்கும் அபாயம் கொண்ட மூடிய ஏசி பெட்டிக்குள், சிறு தவறு நடந்திருந்தாலும் பெரும் தீவிபத்து ஏற்பட்டு பயணிகளின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திர்க்கக் கூடிய இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து, அந்த வீடியோவின் அடிப்படையிலும், அது எந்த ரயிலில், எந்த வழிகளினூடே பயணிக்கும் போது நடந்தது என்பது குறித்தும் ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 98:சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். விளக்கம்: பிறர்க்கு





