தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய்பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்டப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்காக மண்டல அளவில் இதுவரை 4 கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சென்னை தவிர்த்து பிற அனைத்து மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே புதிய வேளாண் பட்ஜெட் தயார் செய்யப்படவுள்ளதாகவும்; வேளாண்மை மட்டுமின்றி கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த பல்வேறு புதிய மற்றும் முக்கிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 98:சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். விளக்கம்: பிறர்க்கு





