தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

சென்னை:
தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் த.வெ.க.வில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். அதிமுகவில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். தி.மு.க.வில் அவருக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கும், முன்னாள் தி.மு.க. அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்டு அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,- ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வகிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தோப்பு வெங்கடாசலம் தவெகவில் இணைவாரா என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?