கோனாக்ரி:
கினியா நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையால் தார் எஸ் சலாம் என்ற பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய குப்பை மேடு சரிந்து அருகில் இருந்த குடிசைகளில் விழுந்தது.
இதில் அந்த வீடுகளில் வசிக்கும் ஏராளமானோர் புதையுண்டனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படை வீரரகள் ஈடுபட்டனர். இதில் பல வீடுகள் சேதமடைந்து இருப்பதுடன் இதுவரை 30 பேர் புதையுண்டு இறந்ததாகவும், 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ, நகரின் மிகப்பெரிய குப்பை கிடங்கான இந்த இடத்தை மூட திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறி இருந்தனர். இருப்பினும் விபத்து நடந்த போது இன்னும் பலர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்
சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி






