சைதாப்பேட்டை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கழிவுநீர் குழாயில் கடந்த 21ம் தேதி அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 142வது வட்டத்தில் உள்ள பணி மனையை சேர்ந்த கழிவுநீரகற்று வாகனம் வந்தது. இதன் மூலம் கழிவுநீர் அடைப்பு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஈடுபட்ட சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர்கள் கையுறை உள்பட எந்தவித பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அன்றைய தகவல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
இந்தநிலையில் இன்று அதே ஜீனிஸ் சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து சிவப்பு நிறத்தில் ஆயில் வெளியேறியது. இதனை சீரமைக்கும் பணிக்காக கழவுநிரகற்று வாகனத்துடன் வந்த சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் கையுறை அணிந்து பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்
சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக






