மீண்டும்… மீண்டுமா… இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது; ஒரே நாளில் 14 பேர் பலி

புதுடெல்லி:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது. ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து சீரான போக்கு இருந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் நேற்று 2151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,903லிருந்து 13,509ஆக உயர்ந்துள்ளது. இது 0.03 சதவீதமாகும். கொரோனாவில் இருந்து நேற்று 1,222 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1,396 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,41,68,321 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
ஆகவே தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,30,862 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனாவுக்கு 1.19% பேர் பலி ஆகி உள்ளனர். நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 15,784 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

மீண்டும்… மீண்டுமா… இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது; ஒரே நாளில் 14 பேர் பலி

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்