கொரோனா முன்னெச்சரிக்கை: புதுச்சேரி பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. புதுவையில் மொத்தம் 255 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 19, ஏனாமில் 2 பேர் தொற்றுடன் உள்ளனர். புதுவையில் 3 பேர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 71 பேரும், காரைக்காலில் 51பேரும், ஏனாமில் 13 பேரும் என மொத்தம் 135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 977 பேர் பலியாகியுள்ளனர். புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையும் எடுத்து வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதாக மருத்துவத்துறை அறிவுறுத்தியது. இதனால் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவத்துறை அறிக்கை பெற்று முதலமைச்சருடன் கலந்து பேசிய உரிய முடிவை கல்வித்துறை எடுக்கும். ஏற்கனவே பள்ளிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு உள்ளது.
பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. கட்டாயம் முக கவசம் அணிவது குறித்து முதலமைமைச்சர் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார். புதுவை தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக உள்ளது. புதுவையில் மருந்து நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வர தயாராக உள்ளது. பல பிரெஞ்சு நிறுவனங்கள் நேரடியாக வந்து சந்தித்துள்ளன.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத நிறுவனங்களை பிரெஞ்சு தூதரகம் சார்பில் கொண்டுவர தயாராக உள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வந்துள்ளன. இந்த அரசு தொழில் முதலீட்டாளர்களுக்கு இன்சென்டிவ் வழங்கியுள்ளது. சலுகைகளை வழங்கியுள்ளோம். இதனால் சேதராப்பட்டு நிலம் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

கொரோனா முன்னெச்சரிக்கை: புதுச்சேரி பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்