பிரபுதேவாவின் 60வது படமாக உருவாகும் ‘வுல்ஃப்’… மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வுல்ஃப்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா நடிப்பில் உருவாகும் 60வது படம் ‘வுல்ஃப்’. இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கிய வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரும் ஓநாயின் குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதான் இப்படத்தின் கதையாகும். இந்த படம் வரலாற்று காலத்திலிருந்து தற்காலம் வரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை படமாக உருவாகி வரும் இப்படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகும். 

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஓநாய்கள் நடுவில் பிரபுதேவா இருப்பது இருக்கிறது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரபுதேவாவின் 60வது படமாக உருவாகும் ‘வுல்ஃப்’… மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் !

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.