சென்னை : சைதாப்பேட்டை ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள மின்கம்பத்தில் இணைத்து கட்டித் தொங்கவிடப்பட்ட விளம்பரப் பலகை (பேனர்) அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பின் வரும் ஆபத்தை உணராது இத்தகைய செயல் அங்குள்ள சிறு வியாபாரிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வந்து செல்லும் பாதையில் கட்ட பட்ட விளம்பர பேனர் சட்டத்திற்கு புரம்பானது.
சென்ற மாதம் ஏப்ரம் 14ல் நடந்த நிகழ்வின் விளம்பர பேனர் இதுனால் வரையில் அகற்றப்படாமல் உள்ளது. அது மட்டும் இல்லாது ஜீனிஸ் ரோடு மற்றும் பஜார் ரோடு சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் விளம்பர பேனர் கட்ட யார் அனுமதி கொடுத்தது ? அங்குள்ள சிறு வியாபாரிகள் பலமுறை சொல்லியும் விளம்பர பலகை அகற்றப்படாமல் இருப்பது ஏன்? இது குறித்து சென்னை மின்சார வாரியமும் அரசும் நடவடிக்கை எடுக்குமா?







