மாம்பலம் இரயில் நிலையத்திருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடை மேம்பாலத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, நியமனக்குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை ஆணையர் (பணிகள்), மத்திய வட்டார துணை ஆணையர், தலைமை பொறியாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





